Friday, February 1, 2013

120 கணினி பயிற்றுநர் தேர்வுப் பட்டியல் வெளியீடு


சென்னை  ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தொகுப்பூதிய அடிப்படையில்கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்துவந்தனர்இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும்மேற்பட்டோர்தேர்வில் பங்கேற்றும்மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது.
இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல்மீண்டும்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டதுமொத்தம், 150மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில்பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறிதேர்வர்கள்,தொடர்ந்த வழக்கில்கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்நீக்கம் செய்துமீதம் உள்ள, 130மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து,அவர்களின் தேர்வுப் பட்டியலைஇணையதளத்தில், (www.trb.tn.nic.inநேற்றிரவுடி.ஆர்.பி., வெளியிட்டது.
இவர்களுக்குபள்ளி கல்வித்துறையில்இம்மாத இறுதிக்குள்பணி நியமனம் வழங்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி  : தினமலர்
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய